௧௧௦
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று 
 ௧ கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, 
“என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார். 
 ௨ உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார். 
உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும். 
பிற நாடுகளிலும்நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும். 
 ௩ நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது 
உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள் 
அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள். 
அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள். 
அந்த இளைஞர்கள் 
தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள். 
 ௪ கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார். 
அவர் மனம் மாறமாட்டார். 
“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர். 
மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.” 
 ௫ என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார். 
அவர் கோபமடையும்போது மற்ற அரசர்களைத் தோற்கடிப்பார். 
 ௬ தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார். 
பூமி பிரேதங்களால் நிரப்பப்படும். 
தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார். 
 ௭ வழியின் நீரூற்றில் அரசர் தண்ணீரை பருகுகிறார். 
அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!